சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட தகவல்:

முதல்வரால் 2025ம் ஆண்டு சுதந்திர தின உரையில் கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அரசாணை (நிலை) எண்.119, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J2) துறை, நாள்: 13.10.2025 அடிப்படையில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் உயர் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு (பொறியியல், கலை மற்றும் அறிவியல் – இளங்கலை & முதுகலை) இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் இம்மேம்பாட்டு பயிற்சிகளை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் பதிவு செய்யப்பட்ட கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளாக இருக்க வேண்டும். பயிற்சிகள் தொழில்நுட்பம், கணினி அறிவு, மொழித் திறன் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் வழங்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் 40 பயிற்சி பிரிவுகளில் 10,000 பயிற்சி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு குடும்பத்தில் ஒரே பயிற்சி பெற அனுமதி வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு
tncwwb-portal என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
உதவி தேவைப்படுவோர் அலைபேசி எண்: 8001858687 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


