படித்த இளைஞர்களுக்கு இலவச போட்டித் தேர்வு பயிற்சி – விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு அரசின் கீழ் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், காளாஞ்சிபட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தில், TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டித் தேர்வுகளில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்காக 200 பேருக்கு கட்டணமில்லா முழுநேர பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி ஆறு மாதங்கள் நடைபெறும்.
பயிற்சியின் முக்கிய அம்சங்கள்
- TNPSC, SSC, IBPS, RRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி
- 6 மாதங்கள் முழுநேர இலவச பயிற்சி
- மொத்தம் 200 பேருக்கு வாய்ப்பு
- தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் பயிற்சி மையம்
தகுதிகள்
பயிற்சியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள்:
- குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- 01.01.2026 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை
ஆர்வலர்கள் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்ப தொடக்க தேதி: 16.05.2026
- கடைசி தேதி: 24.05.2026
விண்ணப்பிக்க:
www.cecc.in
தேர்வு நடைமுறை
விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மற்றும் தமிழக அரசின் இனவாரி ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். பயிற்சி வகுப்புகள் ஜூன் 2026 முதல் தொடங்கும்.
முக்கிய அறிவிப்பு
- பயிற்சி மையத்தில் தங்கும் மற்றும் உணவு வசதிகள் வழங்கப்படமாட்டாது.
- விண்ணப்பிக்கும் முன் அனைத்து விவரங்களையும் கவனமாக படிக்கவும்.
தொடர்புக்கு
மேலும் விவரங்களுக்கு:
04553 – 291269
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்:
CECC Official Website

